Followers

Thursday, 22 October 2015

இஸ்லாமிய தண்டனை - விபச்சாரம்



ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்கிறார் வள்ளுவர். ஒழுக்கக் கேடான ஒரு தொழில் விபச்சாரம் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இதற்கு என்ன தண்டனை தருவது?  

சில நாடுகளில் விபச்சாரத்தை சட்டரீதியாக அங்கீகரித்துள்ளனர். சிலநாடுகளில் சிறைத்தண்டனை, அபராதம் போன்ற தண்டனைகள் வழங்கப்படுகிறது. முஸ்லீம் நாடுகளில் கல்லால் எறிந்து கொல்லுதல் என்ற தண்டனை வழங்கப்படுகிறது. இதில் எது சரி என்பதை சற்று ஆராய்வோம்

2234. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவரின் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் தண்டனையாக அவளுக்குக் கசையடி கொடுங்கள்! அவளைக் குறை கூற வேண்டாம்! மீண்டும் விபச்சாரம் செய்தால் தண்டனையாகக் கசையடி கொடுங்கள்! அவளைக் குறை சொல்ல வேண்டாம்! பிறகு மூன்றாம் முறை விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் முடியாலான ஒரு கயிற்றுக்காவது அவளை விற்று விடுங்கள்!" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :2 Book :34 2314. & 2315. அபூ ஹுரைரா(ரலி) ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்கள்: நபி(ஸல்) அவர்கள் உனைஸ்(ரலி) அவர்களிடம் 'இன்னாரின் மனைவியிடம் நீ சென்று, அவர் விபசாரக் குற்றத்தை ஒப்புக் கொண்டால் கல்லெறிந்து கொல்லும் தண்டனையை நிறைவேற்று!' என்று கூறினார்கள். 2388. அபூ தர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, 'உன் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) மரணமடைந்து விடுகிறவர் சொர்க்கம் புகுவார்" என்று கூறினார்கள். நான், 'இப்படி இப்படியெல்லாம் செய்த வருமா (விபச்சாரக் குற்றமும், திருட்டுக் குற்றமும் புரிந்தவருமா) சொர்க்கம் புகுவார்?' என்று கேட்டேன். ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'ஆம், (அவரும் சொர்க்கம் புகுவார்)" என்று பதிலளித்தார்கள். முதல் வசனத்தில் அடிமைப்பெண் விபச்சாரம் புரிந்தால் அவளுக்கு கசையடி கொடுக்கவும், தொடர்ந்து செய்தால் அவளை விற்றுவிடவும் முகமது உத்தரவிடுகிறார். இரண்டாவது வசனத்தில் விபச்சாரம் புரியும் பெண்களைக் கல்லால் எறிந்து கொல்ல உத்தரவிடுகிறார். விபச்சாரம் செய்யும் பெண் கூட இணைவைத்து வணங்காமல் வாழ்ந்தால் சொர்க்கம் செல்வார் என்கிறார் முகமது. இணை வைத்து வணங்காமல் விபச்சாரம் செய்யும் பெண்ணை கல்லால் எறிந்து கொன்றால் அவள் நேரடியாக சொர்க்கம் சென்றுவிடுவாளா? அங்கே எந்த ஆணுடன் குடும்பம் நடத்துவாள். இணை வைத்து வணங்குவதை விட விபச்சாரம் மோசமான குற்றமாக இல்லாமல் இருக்கும்போது அவளை கல்லால் எறிந்து கொல்ல ஏன் உத்தரவிட வேண்டும். (காபிர்கள் ஜாக்கிரதை. நீங்கள் விபச்சாரத்தை விட மோசமான குற்றத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள்)  

முகமதுவிடம் ஒரு கர்ப்பிணி பெண்ணை கூட்டி வருகிறார்கள். இறைத்தூதரே இவள் விபச்சாரம் செய்ததினால் கர்ப்பமாகி உள்ளாள் என்கிறார்கள். உடனே முகமதுஅப்படியானால் அவளைக் கல்லால் எறிந்து கொல்லும் தண்டனையை நிறைவேற்றுங்கள்என்கிறார். அவர்கள் தூதரே அவள் வயிற்றில் குழந்தை இருக்கிறது என்கிறார்கள். அதற்கு அவர் குழந்தை பிறந்தபின் கல்லெறி தண்டனையை நிறைவேற்றுங்கள் என்கிறார். அவளுக்கு குழந்தை பிறந்தபின் அவரிடம் அழைத்து வருகிறார்கள். இப்போதும் கல்லெறி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுகிறார். பால்குடிக்கும் குழந்தை இருக்கிறதே என்கிறார்கள். பக்கத்தில் இருந்த மற்றொரு ரபி நான் அந்த குழந்தையை வளர்க்கிறேன் என்கிறார். உடனே முகமது கல்லெறி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட அவர்களும் கல்லால் எறிந்து கொல்கிறார்கள். என்னே அல்லாவின் கருணை.  

அல்லாவின் தூதரின் கருணை புல்லரிக்க வைக்கிறது. (இந்த சம்பவத்தின் குரானின் வசனங்களை குறிக்க தவறி விட்டேன். தெரிந்தவர்கள் கூறுங்கள்.) ஒரு பிரபல நடிகை ஒரே நாளில் ஏராளமான ஆண்களுடன் படுத்து கின்னஸ் சாதனை செய்தவர் திடீரென்று மனம் மாறி ”அந்த நடிகை இறந்து விட்டாள். நான் அந்த நடிகை அல்ல” என்று கூறி ஒழுக்கமான புதிய வாழ்க்கைக்கு மாறினார். இதுபோல் விபச்சாரம் செய்தவர்களில் ஏராளமானவர்கள் திருந்தி தங்கள் சந்ததிகளும் இந்தத் தவறான தொழிலுக்கு வந்துவிடக்கூடாது என்று புதிய வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.  

ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக போற்றும் நம் நாட்டிலேயே பரத்தையர், வேசி, தாசி, என விபச்சாரம் செய்யும் பெண்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் சமுதாயத்தில் அவமானப் படுத்தப்பட்ட நிலையில்தான் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு எந்த தண்டனையும் எவரும் வழங்கியதில்லை. அவர்களுக்கு தண்டனை வழங்கும் பொறுப்பை இறைவனிடம் விட்டுவிட்டனர். தாலி கட்டிய மனைவியை அடித்தால் கூட ஒரு பெண்ணிடம் வீரத்தைக் காட்டுகிறாயே நீயும் ஒரு ஆம்பளையா? என்று கேட்பாா்கள். அதாவது பெண்களை அடிப்பது, துன்புறுத்துவது ஒரு இழிவான செயல். 

ஒரு தாசியின் வீட்டின் அருகில் ஒரு சாமியார் இருந்தார். அவர் தினசரி அந்த வீட்டிற்கு ஒவ்வொரு ஆண் வரும்போதும் ஒரு கல்லை போட்டு வந்தார். ஒருநாள் அந்த தாசியை அழைத்து நீ செய்த பாவத்தின் அளவைப் பார் என்று கற்குவியலைக் காட்டினார். அவள் மனம் வருந்தினாள். இருவரும் ஒருநாள் இறந்தனர். சாமியாரை நரகத்திற்கு அனுப்பிய எம தூதர்கள் தாசியை சொர்க்கத்திற்கு அனுப்பினர். சாமியார் பாவம் செய்த அந்த தாசியை சொர்க்கத்திற்கு அனுப்புகிறீர்களேஎன்றார். அதற்கு எம தூதர்கள்அவள் விபச்சாரம் செய்தாலும் இறைவனிடம் மன்னிப்புகேட்டு மனம் வருந்தி வந்தாள். நீர் சாமியாராக இருந்தாலும் அவள் செய்யும் விபச்சாரத்தையே உம் மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது. அதனால் உமக்கு நரகம்என்றனர். இப்படி ஒரு கதையை படித்திருப்பீர்கள்

 எனவே எண்ணங்கள் நல்லவையாக இருக்க வேண்டும். விபச்சாரம் செய்யும் பெண்களால் சமுதாயத்தில் வேறு என்ன பாதிப்பு ஏற்படுகிறது? சில ஆண்கள் தம் குடும்பத்தை கவனிக்காமல் விபச்சாரிகளிடம் தங்கள் சம்பாத்தியத்தை கொடுத்துவிட்டு தம் குடும்பம் சீரழிய விட்டுவிடுகின்றனர். இதனால் குடும்பங்களில் குழப்பம் ஏற்படுகிறது. ஏதாவது நன்மை சமுதாயத்திற்கு ஏற்படுகிறதா? என்றால் காமத்தைக் கட்டுப்படுத்த இயலாத காமவெறியர்களின் வடிகாலாக இவர்கள் இருப்பதால் சமுதாயத்தில் குடும்பப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்படுகிறது. ஆசையை அடக்க முடியாவிட்டால் வேசிகளிடம் போகவேண்டியதுதானே என்று வல்லுறவு கொள்பவர்களைக் குறிப்பிடுவர். ஒரு வேசியை வல்லுறவு கொண்டுவிட்டால் அதனால் அந்த பெண்ணுக்கு பெரிதாக பாதிப்பு இல்லை. அதேசமயம் குடும்பப்பெண்களோ, சிறுமிகளுக்கோ நேர்ந்துவிட்டால் அதன் பாதிப்புகள் அதிகம். விபச்சாரத்திற்கு முகமது கொடுக்கும்  தண்டனை கொடுரமானது. மனிதத்தன்மையற்றது. 



No comments:

Post a Comment