உள்ளத்தால் உள்ளலும் தீதே
பிறன்பொருளை கள்ளத்தால் கள்வேம் எனல்
என்கிறார் திருவள்ளுவர் அடுத்தவன் பொருளை
களவு
செய்வேன் என்று
மனதால்
நினைப்பதே தீது
என்கிறார். ஒருவன்
உழைத்து சம்பாதித்த செல்வத்தை மற்றொருவன் திருடிச்செல்வது மிகப்பெரிய குற்றம்தான். இதற்கு
என்ன
தண்டனை
வழங்குவது. எல்லா
நாடுகளிலும் திருட்டுக் குற்றத்திற்கு சிறைத்தண்டனைதான் வழங்குகின்றன.
ஆனால்
முஸ்லீம் நாடுகள் மட்டும் கருணைக் கடல்
அல்லாவின் தூதர்
முகமது
கூறியபடி கையை
வெட்டிவிடுகின்றன. 2648. உர்வா இப்னு
ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். மக்காவை வெற்றி
கொண்ட
போரின்போது (மக்ஸூமி குலத்தவரான ஃபாத்திமா பின்த்து அஸ்வத்
என்னும் பெயருடைய) திருட்டுக் குற்றம் புரிந்த ஒருவர்
இறைத்தூதர் அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் அவரின்
கையைத்
துண்டிக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அவரின்
கை
துண்டிக்கப்பட்டது. 3475. ஆயிஷா(ரலி)
அறிவித்தார். (மக்கா
வெற்றியின் போது)
மக்ஸூமீ குலத்துப் பெண்
ஒருத்தி (ஃபாத்திமா பின்த்
அல்
அஸ்வத்)
திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள்
விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். 'அவள்
விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார்
பேசுவார்கள்?' என்று
தமக்குள் பேசிக்
கொண்டனர். அவர்களில் சிலர்,
'அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா
இப்னு
ஸைத்(ரலி) அவர்களைத் தவிர
இதற்கு
யாருக்குத் துணிவு
வரும்?'
என்று
கூறினர். (உஸாமா(ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள,
அவ்வாறே) உஸாமா(ரலி) நபி(ஸல்)
அவர்களிடம் (அவள்
விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு
இறைத்தூதர்(ஸல்)
அவர்கள், 'அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு
தண்டனையின் விஷயத்திலா (அதைத்
தளர்த்தும்படி என்னிடம்) நீ
பரிந்துரை செய்கிறாய்" என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு
எழுந்து நின்று
உரை
நிகழ்த்தினார்கள். பிறகு
(அவ்வுரையில்), 'உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர்
குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை
(தண்டிக்காமல்)விட்டு
வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன்
திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான்.
அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள்
ஃபாத்திமா திருடி
விட்டிருந்தாலும் அவரின்
கையையும் நான்
துண்டித்திருப்பேன்" என்று கூறினார்கள்.
திருடியவனிடம் இருந்து பறிகொடுத்த பொருளை
ஒருவர்
திரும்பப்பெற்றுவிட்டால் திருடியதற்காக கையை
இழந்தவன் கதி
என்ன?
எல்லா
திருடர்களும் சாகும்வரை திருடிக்கொண்டே இருக்கிறார்களா? திருந்தி வாழ்வதில்லையா? ஆனால்
பாருங்கள் முகமதுவே குறைஷிக் கூட்டத்தாரிடமிருந்து பொருள்களை கொள்ளையடிக்கிறார். அதை
பங்கு
வைத்துக்கொள்கிறார். அதாவது
பிறர் திருடினால் குற்றம். அவர் கொள்ளையடித்தால் குற்றமில்லையா? முகமது
கொள்ளையடித்த வரலாற்றை (சாதனையை)ப்
படித்துப்பாருங்கள்.
குறைஷிகள் பத்ர்
போரினால் அளவிலா
கவலையிலும் துக்கத்திலும் இருந்தனர். இந்நிலைமையில் அவர்கள் ஷாமுக்குச் செல்லும் வியாபாரப் பயணத்தின் கோடை
காலம்
நெருங்கியது. இப்பயணத்தை எப்படி
பாதுகாப்புடன் மேற்கொள்வது என்ற
மற்றொரு கவலையும் அவர்களுக்கு ஏற்பட்டது. குறைஷிகள் இந்த
ஆண்டு
ஷாமுக்குச் செல்லும் வியாபாரக் குழுவின் தலைமைத்துவத்திற்கு ஸஃப்வான் இப்னு
உமையாவைத் தேர்ந்தெடுத்தனர். முஹம்மதும், அவரது
தோழர்களும் நமது
வியாபார மார்க்கங்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கி விட்டனர். அவருடைய தோழர்களை என்ன
செய்வதென்றே தெரியவில்லை. அவரது
தோழர்கள் எப்போதும் கடற்கரைப் பகுதியை கண்காணித்து வருகிறார்கள். கடற்கரைப் பகுதியில் உள்ளவர்கள் முஹம்மதுடன் உடன்படிக்கை செய்து
கொண்டதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் அவருடைய மார்க்கத்தையும் ஏற்று
இருக்கின்றனர். எனவே,
நாம்
எந்த
வழியில் செல்வதென்றே புரியவில்லை. வியாபாரத்திற்குச் செல்லாமல் மக்காவிலேயே தங்கிக் கொண்டால் நமது
முதலீடும் அழிந்து விடும்.
நமது
வியாபாரம் கோடை
காலத்தில் ஷாம்
தேசத்தையும் குளிர்
காலத்தில் ஹபஷாவையுமே சார்ந்துள்ளது என்று
தங்களுக்குள் பேசிக்
கொண்டனர். இவ்வாறு கருத்துப் பரிமாற்றம் நடந்து
கொண்டிருந்த போது
அஸ்வத்
இப்னு
அப்துல் முத்தலிப், “இம்முறை கடற்கரை வழியாக
செல்லும் பாதையைத் தவிர்த்து விட்டு
இராக்
வழியை
எடுத்துக்கொள்!” என்று
ஸஃப்வானிடம் கூறினார். இப்பாதை மிக
நீளமானது மதீனாவின் கிழக்குப் பக்கமாக வெகு
தொலைவில் உள்ளது.
இப்பாதை நஜ்து
மாநிலத்தைக் கடந்து
ஷாம்
செல்கிறது. குறைஷிகள் இந்தப்
பாதையை
முற்றிலும் அறியாதவர்களாக இருந்தனர். எனவே,
பக்ருப்னு வாயில்
கிளையைச் சார்ந்த ‘ஃபுராத் இப்னு
ஹையா“னை வழிகாட்டியாகவும் பயண
அமைப்பாள ராகவும் ஆக்கிக் கொள்ள
ஸஃப்வானுக்கு அஸ்வத்
இப்னு
அப்துல் முத்தலிப் ஆலோசனைக் கூறினார். இவ்வாறு, ஸஃப்வான் இப்னு
உமையாவுடைய தலைமையில் குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் மக்காவிலிருந்து புதிய
பாதையில் புறப்பட்டது. எனினும், இக்கூட்டத்தின் செய்தியும் அதன்
பயணத்
திட்டமும் வெகு
விரைவில் மதீனாவிற்கு எட்டியது. அது
எப்படியெனில்: ஏற்கனவே மக்காவில் இருந்த
‘ஸலீத்
இப்னு
நுஃமான்’ என்ற
முஸ்லிம் நுஅய்ம் இப்னு
மஸ்வூதுடன் மது
அருந்தினார். (இச்சம்பவம் மது
ஹராமாக்கப்படுவதற்கு முன்
நடந்ததாகும்.) நுஅய்ம் அப்போது முஸ்லிமாக இருக்கவில்லை. நுஅய்முக்கு நன்கு
போதை
ஏறியவுடன் இந்த
வியாபாரக் கூட்டத்தைப் பற்றியும் அது
எவ்வழியாக செல்கிறது என்பதையும் தன்னை
அறியாமல் போதையில் உளற,
உடனே
வலீத்
சபையிலிருந்து நழுவி
மதீனா
விரைந்தார். நபி
(ஸல்)
அவர்களைச் சந்தித்து முழு
விவரத்தையும் கூறினார்.
நபி
(ஸல்)
அவர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்கள். 100 பேர்
கொண்ட
வாகனப்
படையை
ஜைது
இப்னு
ஹாஸாவின் தலைமையின் கீழ்
குறைஷிகளைத் தாக்க
அனுப்பி வைத்தார்கள். ஜைது
(ரழி)
தங்களது வீரர்களுடன் விரைந்து சென்று,
நஜ்து
மாநிலத்தில் ‘கர்தா’
என்ற
இடத்தின் நீர்
தேக்கத்திற்கு அருகில் அந்த
வியாபாரக் கூட்டம் தங்கியிருந்த போது
திடீரென அதன்
மீது
தாக்குதல் நடத்தி
வியாபாரப் பொருட்களை கைப்பற்றினார்கள். ஸஃப்வானும் அக்கூட்டத்தைப் பாதுகாப்பதற்காக வந்திருந்த வீரர்களும் எவ்வித
எதிர்ப்பும் காட்டாமல் உயிர்
பிழைத்தால் போதும்
என்று
தப்பித்து ஓடினர்.
முஸ்லிம்கள் இக்கூட்டத்திற்கு வழிகாட்டியாக வந்த
ஃபுர்ராத் இப்னு
ஹய்யானைக் கைது
செய்தனர். சிலர்,
“இவரையன்றி மேலும்
இருவரையும் முஸ்லிம்கள் கைது
செய்தனர்” என்றும் கூறுகின்றனர்.
முஸ்லிம் வீரர்கள் இந்த
வியாபாரக் கூட்டத்திடமிருந்த பாத்திரங்கள் மற்றும் வெள்ளிகளை வெற்றிப் பொருளாக(கொள்ளையடித்து) எடுத்துக் கொண்டு
நபி
(ஸல்)
அவர்களிடம் திரும்பினார்கள். இவர்கள் கொண்டு
வந்த
பொருட்களின் மதிப்பு ஒரு
லட்சம்
திர்ஹம் ஆகும்.
நபி
(ஸல்)
ஐந்தில் ஒரு
பங்கை
ஒதுக்கிவிட்டு மற்ற
அனைத்தையும் அதில்
கலந்துகொண்ட வீரர்களுக்குப் பங்கு
வைத்துக் கொடுத்தார்கள். நபி
(ஸல்)
அவர்கள் முன்னிலையில் ஃபுராத் இஸ்லாமைத் தழுவினார்.
இப்போது இஸ்லாத்தை புரிந்து கொண்டீர்களா? 500 ரூபாய்
திருடினால் அவன்
கையை
வெட்டி
விட
வேண்டும். கொள்ளையடித்தால் அது
சாதனை.
அதற்கு
தண்டனை
கிடையாது. வாழ்க
இஸ்லாம். வளர்க
ஷரியா.
No comments:
Post a Comment